செய்திகள்
முழு நீல நிற நிலவு பற்றி வைரலாகும் தகவல்
உலகின் பல்வேறு பகுதிகளில் முழு நீல நிற நிலவு தோன்றுவது பற்றி இணையத்தில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அக்டோபர் 31 ஆம் தேதி முழு நீல நிலவு தோன்ற இருப்பதாக கூறும் தகவல் அடங்கிய நியூஸ் கார்டுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற நிகழ்வு 76 ஆண்டுகளில் முதல்முறையாக நடைபெற இருப்பதாகவும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில் அக்டோபர் 31, 2021 அன்று முழு நீல நிலவு தோன்றாது என தெரியவந்துள்ளது. உண்மையில் முழு நீல நிற நிலவு ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்.
கடந்த ஆண்டு உலகின் சில பகுதிகளில் முழு நீல நிற நிலவு தோன்றியது. இந்த ஆண்டிற்கான முழு நீல நிற நிலவு அக்டோபர் 20, 2021 ஆம் தேதி தோன்றியது. பின் நவம்பர் 19, 2021 ஆம் ஆண்டு முழு நீல நில நிலவு தோன்றும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அக்டோபர் 31 ஆம் தேதி முழு நீல நில நிற நிலவு தோன்றாது என்பது உறுதியாகிறது.