செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

இடைத்தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது- தமிழிசை பேட்டி

Published On 2019-08-03 07:32 GMT   |   Update On 2019-08-03 08:25 GMT
இடைத்தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி:

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் ஆன்மீக பூமி என்பதை பெருமாளும், அத்திவரதரும் நிரூபித்து வருகின்றனர். ஆன்மீகம் தழைத்தோங்க வேண்டும் என்கிற கொள்கையோடு பாரதிய ஜனதா கட்சி களத்தில் இறங்கி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகின்றோம். உறுப்பினர் சேர்க்கை எங்களுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தரும். மொத்தம் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து வருகிற 11-ந்தேதி முழுமையாக தெரிவிக்கப்படும்.

மோடி அரசு தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மருத்துவ காப்பீடு திட்டம், செல்ல மகள் சேமிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.


சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. உட்கட்சி பூசல் காரணமாக கொலைகள் அரங்கேறி வருகிறது. தி.மு.க. மீது தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

புதிய கல்வி கொள்கை, முத்தலாக் உள்ளிட்ட சட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மத்தியில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் தூத்துக்குடியில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைக்கு உரிய அழுத்தம் கொடுத்து வருகிறோம். உள்ளாட்சி தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News