செய்திகள்
வேலூர் தொகுதி தேர்தல்: காங்கிரஸ் பார்வையாளர்கள் நியமனம்
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் காங்கிரஸ் பார்வையாளர்களாக சிரஞ்சீவி, முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.என்.முருகானந்தம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. முனிரத்தினம் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.என்.முருகானந்தம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. முனிரத்தினம் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.