செய்திகள்
திமுக முன்னணி எதிரொலி - அறிவாலயத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
பாராளுமன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் முன்னணி நிலவரங்கள் காலை 9 மணி அளவில் வெளிவர தொடங்கின. இதில் தி.மு.க. பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். கருணாநிதி வாழ்க, மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
உற்சாக குரல் எழுப்பி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேரம் ஆக ஆக தொண்டர்கள் கூட்டம் அதிகமானது. திமுக வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள்.
வெற்றி செய்தி காரணமாக அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அங்கு உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அறிவாலயம் களை கட்டியது. தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தனர்.
இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். கருணாநிதி வாழ்க, மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
உற்சாக குரல் எழுப்பி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேரம் ஆக ஆக தொண்டர்கள் கூட்டம் அதிகமானது. திமுக வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள்.
வெற்றி செய்தி காரணமாக அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அங்கு உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அறிவாலயம் களை கட்டியது. தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தனர்.