செய்திகள்

ஆண்டிப்பட்டியில் பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு

Published On 2019-04-16 16:29 GMT   |   Update On 2019-04-16 16:29 GMT
ஆண்டிப்பட்டியில் பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் நான்கு முறை வானத்தை நோக்கி சுட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News