செய்திகள்

தென் சென்னைக்கு உழைக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் - தமிழச்சி தங்கபாண்டியன் வேண்டுகோள்

Published On 2019-04-14 10:02 GMT   |   Update On 2019-04-14 10:02 GMT
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்க நல்லூர் பகுதிக்கு உட்பட்ட மா. பொ.சி நகர் பகுதியில் பிரசாரம் தொடங்கி வீதிவீதியாக வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019


தென் சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்க நல்லூர் பகுதிக்கு உட்பட்ட மா. பொ.சி நகர் பகுதியில் பிரசாரம் தொடங்கி வீதிவீதியாக வாக்கு சேகரித்தார். அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:-

“இந்த மண்ணின் மகள் நான், இதே பகுதியில் இருக்கும் நீலாங்கரையில் தான் என் வீடு உள்ளது. நீங்கள் எந்த பிரச்னைக்காகவும் என்னை அணுகலாம், உங்களுக்கு உழைப்பதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள், நம் பகுதி பிரச்னை என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். குடிநீரும், போக்குவரத்து பிரச்சனை தான் இந்த பகுதியில் பிரதானப்பிரச்சனைகள்.

இந்த பிரச்னைகளை நிரந்தரமாக தீர்பதற்கான திட்டங்கள் என்னிடம் உள்ளது. என்று பேசினார். நைனார் குப்பம் வந்தபோது உத்தண்டி 4-வது வார்டு முன்னாள் உறுப்பினர் குணசேகர் தலைமையில் வரவேற்றனர்.

அதே பகுதியில் இதயதுல்லா, மவுலானா, மீரான் மொய்தீன், உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழச்சி தங்கபாண்டியனை வரவேற்று ஆதரவை தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., பெருங்குடி ரவி அரவிந் ரமேஷ் எம்.எல்.ஏ, வட்டசெயலாளர் ராஜேந்திரன், பிரதீப், ம.தி.மு.க. கழக குமார் உள்ளிட்டவர்கள் வேட்பாளருடன் வாக்கு கேட்டு சென்றனர். #LokSabhaElections2019

Tags:    

Similar News