செய்திகள்

கொளத்தூரில் பிரசாரம் செய்த டாக்டர் கலாநிதி வீராசாமிக்கு பெண்கள் வரவேற்பு

Published On 2019-04-10 09:24 GMT   |   Update On 2019-04-10 09:24 GMT
வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வீதிதோறும் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். #DMK #LokSabhaElections2019

சென்னை:

வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வீதிதோறும் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை ஏராளமான பெண்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்து உங்களுக்கே எங்களின் ஆதரவு என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

கொளத்தூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று வீதி வீதியாக வேட்பாளர் கலாநிதி பிரசாரம் செய்தார். வாக்காளர்களிடம் பிரசாரம் செய்கையில் இந்த தொகுதி கழக தலைவர் ஸ்டாலினின் தொகுதி. இந்த தொகுதியில் தளபதி, மக்களின் தேவைகளை தேடி வந்து செய்து வருகிறார். தமிழகத்தில் தளபதி தலைமையில் ஆட்சி மலர வேண்டும். மத்தியில் நிலையான நல்லதொரு ஆட்சி அமைய வேண்டும். எனவே அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #DMK #LokSabhaElections2019

Tags:    

Similar News