செய்திகள்

அம்பத்தூரில் புதிய ரெயில் முனையம் - திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உறுதி

Published On 2019-04-10 09:16 GMT   |   Update On 2019-04-10 10:26 GMT
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் நலனை மட்டுமே சிந்திக்கும் கட்சி திமுக தான். எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் நிறை வேற்றி உள்ளோம். அம்பத் தூர் பகுதியில் புதிய ரெயில் முனையம் அமைக்கபடும். அதனால்தொழில் வளம் பெரு கும்.மத்தியில் நிலையான ஆரோக் கியமான ஆட்சி அமைய உதயசூரியனுக்கு வாக்களியுங் கள் என பேசினார். வேட்பாளர் டி.ஆர்.பாலுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சிறு வர்கள் கலைஞர், பெரியார் உள்ளிட்ட. தலைவர்கள் வேடம் அணிந்து வரவேற்ற னர். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர் பாபு எம்.எல்.ஏ., தி.மு.க. வடக்கு பகுதி செயலா ளர் ஜோசப் சாமு வேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

Tags:    

Similar News