செய்திகள்

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் - ஜி.கே.வாசன்

Published On 2019-04-09 05:20 GMT   |   Update On 2019-04-09 06:24 GMT
ஓமலூரில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். #GKVasan #ADMK

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தை பொருத்த வரையில் இரும்பாலை விரிவாக்க திட்டம், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டு வந்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது. மாநில அரசை பொருத்தவரை முதல்வர் சேலம் மாவட்டத்தை பாலம் மாவட்டமாக மாற்றியுள்ளார்.

பெங்களூர் பேருந்து நிலையம் போல் தமிழகத்தில் முதன் முதலாக இரண்டு அடுக்கு பஸ் போர்ட் அறிவித்துள்ளார், விவசாய கால் நடை ஆராய்ச்சி நிலையம் 300 கோடி செலவில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை ஏரிகளில் நிரப்பும் உபரி நீர் திட்டம் கொண்டு வர ஆலோசனைகள் பெற்று வருகிறார்.

தற்போது மத்திய மாநில அரசுகள் இணக்கமான ஒத்த கருத்துடைய அரசாக உள்ளது. மத்தியில் உள்ள அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும்.

மாநில அரசை பொருத்த வரையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சாமானியர்களுடன் பழகி வருவதால் அனைத்து தரப்பினர்களின் எண்ணங்களை உணர்ந்து அனைத்து துறைகளிலும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். எனவே தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்,

சேலம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும், தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்ட மன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களில் கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார். #GKVasan #ADMK

Tags:    

Similar News