செய்திகள்

முதலமைச்சருடன் சரத்குமார் சந்திப்பு- அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்

Published On 2019-03-26 08:22 GMT   |   Update On 2019-03-26 08:22 GMT
சென்னையில் இன்று முதலமைச்சரை சந்தித்த சரத்குமார், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். #LokSabhaElections2019 #Sarathkumar
சென்னை:

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக கூறினார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

‘முதல்வரை சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக மத்திய அரசு இருக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தேன். மத்தியில் வலிமையான ஒரு அரசு வரவேண்டும், தொங்கு பாராளுமன்றம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுக கூட்டணியை ஆதரிக்கிறேன்’ என்றார் சரத்குமார். #LokSabhaElections2019  #Sarathkumar
Tags:    

Similar News