செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 1 கோடி பறிமுதல்- கலெக்டர் மகேஸ்வரி தகவல்

Published On 2019-03-22 09:42 GMT   |   Update On 2019-03-22 09:42 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக இதுவரை ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், மார்ச். 22-

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டரு மான மகேஸ்வரி ரவிக் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் திரு வள்ளூர் சட்டசபை தொகுதி களுக்கு, முகேஷ் கட்டாரியா (மொபைல் எண்: 89252 40311)

பூந்தமல்லி, ஆவடி மற்றும் மாதவரம் சட்டசபை தொகுதிகளுக்கு பிரவீன் குமார் (மொபைல் எண். 89252 40310) ஆகியோர் செலவின மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வேட்பா ளர்களின் செலவு விபரங் களை, தேர்தல் செலவின பார்வையாளர்களின் மொபைல் போன் எண் களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக இதுவரை ரூ. 1.05 கோடி பறிமுதல் செய் யப்பட்டு உள்ளது. இதில், உரிய ஆவணம் காட்டிய தால், ரூ. 1.13 லட்சம் ரூபாய் விடு விக்கப்பட்டது.

மீதம் உள்ள ரூ. 1.04 கோடி பூந்தமல்லி அரசு கருவூ லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ. 10 லட் சம் மதிப்புள்ள குட்கா கைப் பற்றப்பட்டு, கவரைப் பேட்டை போலீஸ் நிலையத் தில் உள்ளது.

ஓட்டுப்பதிவின் போது இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அடையாள அட்டையை காண்பித்து ஓட்டு அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

Similar News