உள்ளூர் செய்திகள்

மண்டல அளவிலான கோ-கோ தேர்வு போட்டிகள்

Published On 2023-09-05 15:32 IST   |   Update On 2023-09-05 15:32:00 IST
  • 14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
  • 9 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

 கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மண்டல அளவிலான ஆண்களுக்கான கோ-கோ தேர்வுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 215 மாணவர்கள் கலந்து கொண்டனர். 14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 9 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை தலைமையில் நடந்த தேர்வுப் போட்டியில், உடற்கல்வி ஆசிரியர்கள் மாணிக்கம், ராகவன், கோபி, மாதேஷ், பரிமளா, மரியசெல்வம், திவ்யலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, மீனாட்சி, முருகன், ஆல்பர்ட், ஆண்டனி, கருப்பையா, செல்வகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பெண்களுக்கான கோ-கோ தேர்வுப் போட்டிகள் நடக்க உள்ளன.

Tags:    

Similar News