உள்ளூர் செய்திகள்

சேற்றில் சிக்கி வாலிபர் சாவு

Published On 2023-04-20 09:44 GMT   |   Update On 2023-04-20 09:44 GMT
  • திருமணம் ஆன இவர் மனைவியைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
  • ஏரியில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளார்.

பாப்பாரப்பட்டி,

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 31). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.

திருமணம் ஆன இவர் மனைவியைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் சிட்லகாரம் பட்டி ஏரியில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News