உள்ளூர் செய்திகள்

பாம்பாறு அணையில் நீரில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2023-07-08 15:31 IST   |   Update On 2023-07-08 15:31:00 IST
  • கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பாம்பாறு அணையில் குளித்து கொண்டிருந்தார்.
  • ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி 

சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது28). இவர் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பாம்பாறு அணையில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News