உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

Published On 2023-09-02 15:20 IST   |   Update On 2023-09-02 15:20:00 IST
  • புளியஞ்சேரி பகுதிக்கு அருகே வந்தபோது நிலைதடு–மாறி கீழே விழுந்தது.
  • சந்திரசேகர் படுகாயம–டைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பி.மாண்டபள்ளி கிராமத்–தைச் சேர்ந்தவர் ராஜப்பன். இவரது மகன் சந்திரசேகர் (வயது25).

இவர் குருபரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் புளியஞ்சேரி பகுதிக்கு அருகே வந்தபோது திடீ–ரென்று வண்டி கட்டுப்–பாட்டை இழந்து நிலைதடு–மாறி கீழே விழுந்தது. இதில் சந்திரசேகர் படுகாயம–டைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குருபரப்பள்ளி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து இறந்த சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News