உள்ளூர் செய்திகள்

மனைவியின் கள்ளக்காதலால் வாலிபர் தற்கொலை

Published On 2023-02-05 13:44 IST   |   Update On 2023-02-05 13:44:00 IST
  • பிழைப்பு நடத்துவதற்காக சொந்த மாநிலத்தை விட்டுவிட்டு இங்கு வந்து தங்கியுள்ளனர்.
  • பிஜிதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வாணியர் தெருவில் வசித்து வந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜிதாஸ் (வயது 31). இவரது மனைவி சுஷ்மிதாதாஸ். இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. பிழைப்பு நடத்துவதற்காக சொந்த மாநிலத்தை விட்டுவிட்டு இங்கு வந்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில் சுஷ்மிதாதாஸ் வேறு ஒருவருடன் தவறான உறவில் இருந்துள்ளார். இந்த தகவல் தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த பிஜிதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவரது நண்பர் ரூபக்தே கொடுத்த புகாரின்பேரில் குளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News