உள்ளூர் செய்திகள்

வள்ளியூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது

Published On 2023-05-19 14:08 IST   |   Update On 2023-05-19 14:08:00 IST
  • ரமேஷ் வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.
  • செந்தாமரைக்கண்ணன் நகையை திருடியது விசாரணையில் தெரியவந்தது.

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் ரமேஷ் (வயது 36).

கதவு உடைப்பு

இவர் கடந்த 26-ந்தேதி தனது உறவினர் உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அன்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 கிராம் நகை திருடப்பட்டிருந்தது.

கைது

இது தொடர்பாக அவர் வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நகையை திருடியது அதே பகுதியில் வசித்து வரும் செந்தாமரைக்கண்ணன் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

Tags:    

Similar News