- கிருஷ்ணகிரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் ஆனார்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள சிவம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் மகள் சுமதி(41) அவர் மத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்ப தாவது:-
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள சுன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவ ருக்கு எனது மகள் சந்தியா (24) என்பவரை சில ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தோம். அவருக்கு 4 வயதில் ஒரு குழத்தையும், ஒன்றரை வந்தில் ஒரு பெண் குழந்தை யும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ந்தேதி சிவம்பட்டி யில் நடந்த பூங்காவனத்து அம்மன் கோவில் திருவிழா வுக்கு பேரக்குழந்தைகளு டன் சந்தியா வந்திருந்தார்.
திருவிழா முடிந்து 25ந்தேதி மத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தனது மகள் மற்றும் பேரக்குழந்தை களை தருமபுரி செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தேன். இரவு ஆகியும் எனது மகள் சுன்னம்பட்டி வரவில்லை என்று எனது மருமருகன் மகாலிங்கம் போன் செய்து வரவில்லை என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சந்தியா மற்றும் குழந்தை களை பல இடங்களில் தேடியும் அவர் எங்கே சென்றார் என்று தெரியவி ல்லை. நான் விசாரித்ததில் எனது மகள் சந்தியா பாரூரை சேர்ந்த வாசுதேவன் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் அவருடன் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
ஆகவே எனது மகள் மற்றும் பேரக்குழந்தை களை தேடி கண்டுப்பிடித்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.