உள்ளூர் செய்திகள்
- சுவேதா கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கத்தை சேர்ந்தவர் சுவேதா(20). பட்டதாரியான இவர், கேளம்பாக்கம் அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.