உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-01-17 07:27 GMT   |   Update On 2023-01-17 07:27 GMT
  • கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
  • யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரம் வட்டம் மூங்கில்து றைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு பகுதி யைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன். இவரது மனைவி சஞ்சீவி (வயது 21). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொ ன்பரப்பி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சஞ்சீவியின் தந்தை தர்மலிங்கம், தனது மகளை சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், தற்கொலைக்கு தூண்டி யதாகவும் மருமகன் ராமகிருஷ்ணன், அவரது தந்தை ராமசாமி, தாய் ஜெயக்கொடி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் ெசய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சஞ்சீவிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News