உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-06-16 15:16 IST   |   Update On 2023-06-16 15:16:00 IST
  • அஸ்வினி வேலை செய்யும் வீடுகளில் நகைகள் திருடு போனதாக தகவல் கிடைத்தது.
  • வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெரியஎலசகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி அஸ்வினி (வயது21). இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அஸ்வினி வேலை செய்யும் வீடுகளில் அடிக்கடி நகைகள் திருடு போனதாக அவரது கணவருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அஸ்வினி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அஸ்வினி தாயார் பாக்கியம்மா ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் அஸ்வினி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் ஓசூர் போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாத் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News