உள்ளூர் செய்திகள்
- ஜலபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
- இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜலபதி. இவரது மனைவி அபிஷால்மியா (25). இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜலபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது.
இதில் மனமுடைந்த அபிஷால்மியா கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது தொடர்பாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.