உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
நத்தம்: ஜவுளி வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை
- கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
- வாழ்க்கையில் விரக்தியடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டியை சேர்ந்தவர் முரளிகுமார் (25). ரெடிமேட் ஜவுளி வியாபாரி. இவருக்கு திருமணமாகி ஆண்குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முரளிகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் முரளி குமார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.