உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் தாய் இறந்த துக்கத்தில் சமையல் மாஸ்டர் தற்கொலை

Published On 2022-09-05 07:55 GMT   |   Update On 2022-09-05 07:55 GMT
  • தாய் இறந்த துக்கத்தில் மனஉளைச்சலில் மது பழக்கத்திற்கு அடிமையானார்.
  • தனது வீட்டிலேயே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் மகன் பிரிட்டோ(29). சமையல் மாஸ்டரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டோவின் தாயார் உயிரிழந்துவிட்டார்.

அப்போது முதல் மனஉளைச்சலில் மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தனது தாய் கனவில் வருவதாக கூறி உறவினர்களிடம் புலம்பி வந்துள்ளார். இதனால் அவருக்கு மனநலஆேலசானை வழங்கப்பட்டது.

இன்று காலை தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அறிந்ததும் நகர் தெற்கு போலீசார் விரைந்து சென்று பிரிட்டோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News