உள்ளூர் செய்திகள்

வள்ளியூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-07-20 09:09 GMT   |   Update On 2022-07-20 09:09 GMT
  • தற்கொலை செய்த வாலிபர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
  • தற்கொலை தொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள வடக்கு கார் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் முகேஷ்ராஜ்(வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகேஷ்ராஜிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் தேடி வந்துள்ளனர்.

சமீபத்தில் அவருக்கு பார்த்த பெண், முகேஷ் ராஜை பிடிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News