உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

Published On 2023-07-14 14:56 IST   |   Update On 2023-07-14 14:56:00 IST
  • தனிமையில் இருந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
  • உடனே அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழவன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மகள் லட்சுமிபிரியா (வயது20).

இவர் பி.சி.ஏ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். தொழிலாளியான குப்புராஜ் கோவையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காரிமங்கலத்தில் கூலி வேலைக்கு சென்று விடுவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமிபிரியாவின் தாய் வேலைக்கு சென்று விட்டார். இதனால் தனிமையில் இருந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். மாலையில் குப்புராஜின் மனைவி வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் தனது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எஙகு தேடியும் லட்சுமிபிரியா காணவில்லை. இதனால் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News