உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே இளம் பெண் திடீர் மாயம் :கணவர் புகார்

Published On 2023-03-04 15:16 IST   |   Update On 2023-03-04 15:16:00 IST
  • எஸ். புதுக்குப்பம் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவரது மனைவி செல்வராணி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது.
  • சம்பவத்தன்று செல்வராணி வீட்டில் இருந்தவரை திடீரென்று காணவில்லை.

கடலூர்:

நடுவீரப்பட்டு அடுத்த எஸ். புதுக்குப்பம் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவரது மனைவி செல்வராணி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. சம்பவத்தன்று செல்வராணி வீட்டில் இருந்தவரை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மணிகண்டன் செல்வராணியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News