உள்ளூர் செய்திகள்
பெரியகுளத்தூரில் இளம்பெண் மாயம்
- கடைக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை
- கணவன் போலீசில் புகார்
கரூர்,
குளித்தலை அடுத்த, பாப்பக்காப்பட்டி பஞ்சாயத்து பெரியகுளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 23). குளித்தலை பஜனை மட வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு துணி வாங்க சென்றார். மீண்டும் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, மணிகண்டன் கொடுத்த புகார் படி, குளித் தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.