உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடியில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2023-10-19 06:36 GMT   |   Update On 2023-10-19 06:36 GMT
  • சம்பவத்தன்று மொபட்டில் தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற இளம்பெண் மாயமானார்.
  • புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த கார்த்திக் மனைவி ரோகினி(24).

இவர்களுக்கு தரணிஸ்(6), கிரிசினியா(4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மொபட்டில் தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற ரோகினி மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரோகினியின் தாய் பஞ்சவர்ணம் போடி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News