உள்ளூர் செய்திகள்
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் யோகாசனம்
- சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.
- மூச்சு பயிற்சி, நாடிசுத்தி, சூரிய நமஸ்காரம், சர்வங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனம் பயிற்றுவிக்கப்பட்டது.
சீர்காழி:
சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ் கண்ணா தலைமையில் யோகா மாஸ்டர் நிமல் முன்னிலையில் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இன்று யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர். முதலில் மூச்சு பயிற்சி, நாடிசுத்தி, சூரிய நமஸ்காரம், சர்வங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனம் பயிற்றுவிக்கப்பட்டது.