உள்ளூர் செய்திகள்

கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியர் சதீஷ்ராஜ் மற்றும் கின்னஸ் சாதனை அதிகாரிகளை படத்தில் காணலாம்.

டை கட்டுவதில் கின்னஸ் சாதனை ஏற்காடு அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்

Published On 2022-12-15 09:08 GMT   |   Update On 2022-12-15 09:08 GMT
  • ஏற்காடு நல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
  • சேலம் ஏற்காடு தனியார் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் வேகமாக டை கட்டி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

ஏற்காடு:

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் சதீஷ்ராஜ் (வயது 36).

ஆசிரியர்

இவர் ஏற்காடு நல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சேலம் ஏற்காடு தனியார் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் வேகமாக டை கட்டி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்க ளாக ஏற்காடு அரசு மருத்துவர்கள் தாம்சன் மற்றும் பிரியதர்சினி ஆகியோரும் நேரம் காப்பாளர்களாக தனியார் பள்ளி விளையாட்டு பயிற்சி யாளர்கள் பாண்டியன் மற்றும் ஜெயக்குமாரும் இருந்தனர்.

கின்னஸ் சாதனை

ஏற்கனவே 2017-ம் ஆண்டு நாக்பூரை சேர்ந்த தீபக் சர்மா என்பவர் 12.89 நொடிகளில் தனது கழுத்தில் டை காட்டியதே கின்னஸ் சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சதீஷ்ராஜ் 11.55 வினாடிகளில் தனது கழுத்தில் டை கட்டி முடித்து தீபக் சர்மாவின் கின்னஸ் சாதனையை முறியடித்தார்.

பயிற்சி

இந்த சாதனை குறித்து சதீஷ் ராஜ் கூறுகையில், எனது மகன் பள்ளிக்கு செல்லும் போது அவருக்கு நான் தான் தினமும் டை கட்டிவிடுவேன். அப்போது அவருக்கு மிக வேகமாக டை கட்டிவிடுவதை கண்ட எனது மனைவி நீங்கள் வேகமாக டை கட்டுகிறீர்கள். இதையே ஒரு சாதனையாக செய்யலாம் என்று என்னிடம் கூறினார். அதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வேகமாக டை கட்டும் பயிற்சியை மேற்கொண்டேன்.

இந்த பயிற்சியின் மூலம் தீபக் சர்மா என்பவர் 12.89 நொடிகளில் டை கட்டிய கின்னஸ் சாதனையை முறி யடித்து, 11.55 நொடிகளில் டை கட்டியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது மனைவி கூறிய அந்த வார்த்தை தான், இந்த சாதனைக்கு காரணம் என்றார்.

Tags:    

Similar News