உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் உலக தண்ணீர் தினம் கடைபிடிப்பு
- மரக்கன்றுகளை நடும் பணி நடந்தது.
- உலகெங்கிலும் காடு மற்றும் நீராதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
ஊட்டி,
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21-ந் தேதி 'உலக வன நாள்' மற்றும் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம்' என்ற இரட்டை தின நிகழ்வு உலகெங்கிலும் காடு மற்றும் நீராதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி கோத்தகிரி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் பேருராட்சி சுகாதார அலுவலர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.