உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

வள்ளாலகரம் ஊராட்சியில் உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி

Published On 2022-11-20 14:47 IST   |   Update On 2022-11-20 14:47:00 IST
  • சுகாதாரத்தை பேணி காப்போம் என்ற உறுதி மொழியை கோஷங்களாக எழுப்பியவாறு இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொண்டனர்.
  • இதில் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய குழுவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை யொட்டி விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சனை பயணத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராப்பர்ட் ஜெயகரன் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, கிராம நிர்வாக அலுவலர் கௌசல்யா ஆகியோர் முன்னிலை வங்கித்தனர்.

ஊராட்சி செயலர் சரவணன் வரவேற்றார்.

பிரச்சாரம்மானது வள்ளாலகரம் ஊராட்சி நுழைவு தோரண வாயிலிருந்து வெங்கடேஸ்வரா நகர், மற்றும் பல்வேறு தெருக்களில் வழியாக கழிவரையை பயன்படுத்துவோம்.

சுகாதாரத்தை பேணி காப்போம் என்ற உறுதி மொழியை கோஷங்களாக எழுப்பியவாறு இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொண்டனர்.

இதில் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய குழுவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் அலெக்ஸ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News