உள்ளூர் செய்திகள்
வத்தலக்குண்டுவில் உலக தாய்ப்பால் வாரவிழா
- வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- இந்த நிகழ்வில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பாக விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் திவ்யா,
ரோட்டரி தலைவர் இளஞ்செழியன், செயலாளர் ரகுநந்தன், முன்னாள் பட்டய தலைவர் மாதவன், டாக்டர் ரியாஸ் அகமது, விருவீடு விக்னேஷ் ரவீந்திரன், அட்வகேட் ஹரிஹரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.