உள்ளூர் செய்திகள்

புனித சூசையப்பர் ஆலயத்தில் உலக மறைபரப்பு ஞாயிறு ஆண்டு விழாவில் பங்குத்தந்தையர்கள் திருப்பலியை நிறைவேற்றினர்.

செந்துறையில் உலக மறைபரப்பு ஞாயிறு ஆண்டு விழா

Published On 2023-10-22 12:30 IST   |   Update On 2023-10-22 12:30:00 IST
  • செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று காலை உலக மறைபரப்பு ஞாயிறு ஆண்டு விழா கொண்டாடப்பட்டது‌.
  • பின்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

நத்தம்:

நத்தம் அருகே செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று காலை உலக மறைபரப்பு ஞாயிறு ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

உலக மறைபரப்பு ஞாயிறுக்கான செய்தியில் 'பற்றியெரியும் இதயங்கள். பயணப்படும் பாதங்கள் ' என்ற தலைப்பை கருப்பொருளாகவும் உள்ள தினவிழாவை நினைவு கூறும் வகையில் பங்குதந்தையர்கள் இன்னாசிமுத்து, மைக்கேல்ராஜ், ஞானப்பிரகாஷம், ஜெரால்டுசகாயசெல்வா, பிராங்கிளின் ஆகியோர் தலைமையில் திருப்பலியில் இயேசு நம் இதயங்களை நமக்குள் பற்றி எரியச் செய்வாராக, அவருடைய தூய ஆவியாரிடமிருந்து வரும் வல்லமையினாலும் ஞானத்தினாலும் அவருடைய மீட்பின் மறையுண்மைகளை நாம் உலகுக்கு அறிவிக்கும்படி, அவர் உள்ளங்களை ஒளிரச்செய்வாராக என்றும் கருத்துகளை இறைம க்களிடம் எடுத்து கூறினர்.

இதைத்தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெற்றது.பின்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News