உள்ளூர் செய்திகள்

கல்குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

உளுந்தூர்பேட்டை அருகே குவாரியில் பாம்பு கடித்து ஊழியர் சாவு: இழப்பீடு வழங்ககோரி உறவினர்கள் முற்றுகை

Published On 2023-06-22 06:48 GMT   |   Update On 2023-06-22 06:48 GMT
  • கலியன் ஓரியன்டல் கம்பெனி கல்குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் காவளராக பணி புரிந்து வந்தார்.
  • கம்பெனியில் வேலை பார்த்து வந்த கலியனை பாம்பு கடித்தது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் குருபீடபுரம் பகுதியை சேர்ந்தவர் கலியன் (வயது 45). இவர் எலவனசூர்கோட்டை அருகே கொட்டயூர் பகுதியில் உள்ள ஓரியன்டல் கம்பெனி கல்குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் காவளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கம்பெனியில் வேலை பார்த்து வந்த கலியனை பாம்பு கடித்தது. இதில் அலறி கீழே விழுந்தார். இதனை பார்த்த சக பணியாளர்கள் கலியனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலியன் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலியனின் உறவினர்கள் கொட்டயூர் பகுதியில் உள்ள கல்குவாரி கம்பெனி முன்பு திரண்டனர். இறந்த கலியனிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதனால் கலியன் குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் வழங்க வேண்டும் எனக் கூறி முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த எலவனசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், தனிப்பிரிவு ேபாலீசார் சுரேஷ் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையிட்ட கலியன் உறவினர்களிடம் இறந்த கலியன் குடும்பத்திற்கு உரிய முறையில் இழப்பீட்டு தொகை வாங்கி தரப்படும் என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை முன்னிட்டு கம்பெனியின் ஒப்பந்ததாரர் இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் கலியன் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று கூறியதின்பேரில் முற்றுகையிட்ட கலியன் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News