உள்ளூர் செய்திகள்

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

Published On 2023-04-23 07:35 GMT   |   Update On 2023-04-23 07:35 GMT
  • தங்கதுரை (வயது 22). தேங்காய் பறிக்கும் தொழிலாளி.
  • திவாகர் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பா ளையத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தங்கதுரை (வயது 22). தேங்காய் பறிக்கும் தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரையைச் சேர்ந்த திவாகர் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்பொ ழுது நிலை தடுமாறி தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியி லேயே தங்கதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை சவக்கிடங்கில் வைத்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News