உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
- பாளை மேல குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் மணி (வயது 60). கூலி தொழிலாளி.
- மோட்டார் சைக்கிள் மோமி மணி தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்தா அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
பாளை மேல குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் மணி (வயது 60). கூலி தொழிலாளி. இவர் கடந்த 1-ந் தேதி குறிச்சி சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.