உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2022-07-08 14:48 IST   |   Update On 2022-07-08 14:48:00 IST
  • இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தை உள்ளது.
  • இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

பந்தநல்லூர் அருகே குலசேகரநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் ராமதுரை (வயது 52) கூலி தொழிலாளி. இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ராமதுரை விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்ைச பலனின்றி இறந்தார்.

இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News