உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் நெசவு தொழிலாளி தற்கொலை

Published On 2023-09-09 07:32 GMT   |   Update On 2023-09-09 07:32 GMT
  • மது போதைக்கு அடிமையான தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நாகல் நகர், பாரதிபுரம் இளைஞர் படிப்பகம் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (53). நெசவு தொழிலாளி. இவரது மனைவி புஷ்பம். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் மது போதைக்கு அடிமையானார். நேற்று இரவு வழக்கம் போல் தனது அறைக்கு படுக்க சென்றார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

இதனையடுத்து இன்று காலை அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மனைவி புஷ்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News