உள்ளூர் செய்திகள்

மனைவி பிரிந்து சென்றால் தொழிலாளி தற்கொலை

Published On 2023-03-13 15:50 IST   |   Update On 2023-03-13 15:50:00 IST
  • கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
  • மாந்தோப்பில் நேற்று அசோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள சாமந்தமலை பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 5 வருடமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அசோகன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

நேற்று அதே பகுதியில் ரைஸ்மில் அருகே உள்ள மாந்தோப்பில் நேற்று அசோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News