உள்ளூர் செய்திகள்
திருநாவலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
- கலியன் வழக்கம் போல கூலி வேலைக்கு சென்று நேற்று வீடு திரும்பினார்.
- கொக்கு பிடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே பாதூரை சேர்ந்தவர் கலியன் (வயது 62). விவசாய க் கூலி. இவர் வழக்கம் போல கூலி வேலைக்கு சென்று நேற்று வீடு திரும்பினார். அப்போது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி மற்றும் மகன்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கலியன், கொக்கு பிடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது தொடர்பாக திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.