உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வடமதுரை அருகே மதுபானம் வாங்கி தராததால் தொழிலாளி மீது தாக்கு

Published On 2022-11-25 07:07 GMT   |   Update On 2022-11-25 07:07 GMT
  • மது வாங்கி தராத ஆத்திரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
  • காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காணப்பாடி மாலப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது41). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்

சம்பவத்தன்று வேலையில் இருந்த தர்மரா ஜிடம் மாலைப்பட்டியை சேர்ந்த மூர்த்தி (31) தனக்கு மதுபானம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டி தர்மராஜை கம்பால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேலும் தர்மராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்த மூர்த்தியை வடமதுரை போலீசார் கைது செய்து வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News