உள்ளூர் செய்திகள்

பெண் ஊழியரை மிரட்டிய தொழிலாளி கைது

Published On 2022-09-10 09:30 GMT   |   Update On 2022-09-10 09:30 GMT
  • தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார்.
  • கோர்ட்டு வளாகத்தில் சிறுநீர் கழித்து ஒழுங்கீனமாக செயல்பட்டுள்ளார்.

கோவை:

கோவை காந்திபுரம் சாஸ்திரி வீதியை சேர்ந்தவர் கபாலி என்கிற இளமுருகன் (வயது 43). கூலி தொழிலாளி. இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு விசாரணை கோவை கோர்ட்டில் நடந்து வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கபாலி கோவை கோர்ட்டுக்கு சென்றார். அப்போது அவர் கோர்ட்டு வளாகத்தில் சிறுநீர் கழித்து ஒழுங்கீனமாக செயல்பட்டுள்ளார். இதனை குற்றவியல் நீதிமன்ற தலைமை கிளார்க் சுமித்ரா என்பவர் கண்டித்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கபாலி தகாத வார்த்தைக ளால் பேசி கோர்ட்டு ஊழியர் சுமித்ராவுக்கு மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து சுமித்ரா ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகா ரின் பேரில், போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து கபாலி எ ன்கிற இளமுரு கனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

.

Tags:    

Similar News