உள்ளூர் செய்திகள்

மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5¼ கோடி கடனுதவி

Published On 2022-07-28 10:14 GMT   |   Update On 2022-07-28 10:14 GMT
  • உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 81 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 கோடியே 34 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
  • காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

உத்திரமேரூர்:

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 81 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 கோடியே 34 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதாஞானசேகரன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு துணைத்தலைவர் வசந்திகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். கடனுதவி பெற்ற அனைவரும் வாழ்வில் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்றார். இதில் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் பொன்.சசிக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News