உள்ளூர் செய்திகள்

பெரியாம்பட்டி பேருந்து நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

காரிமங்கலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

Published On 2023-06-09 09:55 GMT   |   Update On 2023-06-09 09:55 GMT
  • குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
  • அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி அடுத்துள்ள பூதாளம்கொட்டாய், ராமன்கொட்டாய் ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த நிலையில் இப்பகுதி கிராமங்களுக்கு கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் தவித்து வந்தனர். குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறினர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை பெரியாம்பட்டி பேருந்து நிலையம் முன்பு திடீரென காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் மற்றும் பஞ்சாயத்து தலை வர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதனால் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News