உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் ஓட்டம்

Published On 2022-11-13 07:16 GMT   |   Update On 2022-11-13 07:16 GMT
  • வசந்த் என்பவர் பி.காம் முடித்துவிட்டு அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
  • ஆனால் பணத்தை திரும்பத் தராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஆனந்தி (வயது 36). இவரும் கள்ளக்குறிச்சி நேபால் தெருவை சேர்ந்த பெரியசாமி மகள் சாந்தகுமாரி ஆகிய இருவரும் தோழிகளாக பழகி வந்தனர். அப்போது ஆனந்தியின் தம்பி வசந்த் என்பவர் பி.காம் முடித்துவிட்டு அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சாந்தகுமாரி தனது கணவர் தேவதாஸ் கள்ளக்குறி ச்சியில் வருவாய் ஆய்வாள ராக பணிபு ரிவதாகவும், அவரிடம் கூறி வசந்த்துக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் என ஆனந்தியிடம் கூறியுள்ளார்.

அதனை கேட்ட ஆனந்தி 2 தவணைகளாக தலா ரூ. 5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இந்தநிலையில் நீண்ட நாட்களாக வேலை வாங்கிதரவில்லை. இதனால் ஆனந்தி கொடுத்த பணத்தை திருப்பிதருமாறு கேட்டார். ஆனால் பணத்தை திரும்பத் தராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையி ல் சாந்தகுமாரி திடீரென தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News