சங்கராபுரம் அருகே பெண் தூக்குபோட்டு தற்கொலை
- செலின்மேரி வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
- ஒரு மரத்தில் செலின்மேரி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் பத்தியநாதன் மனைவி செலின்மேரி (வயது46). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் செலின்மேரி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இது குறித்து வடபொன்பரப்பி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செலின்மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்கு றிச்சி அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு ப்பதிவு செய்து அவரது தற்கொ லைக்கான காரணம் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.