உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் பெண் தூக்கு போட்டு சாவு

Published On 2023-02-28 15:02 IST   |   Update On 2023-02-28 15:02:00 IST
  • ஓசூர் பகுதியில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.
  • தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காமாட்சி (வயது 40). தற்போது ஓசூர் பகுதியில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த காமாட்சி வீட்டில் யாருமில்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது கணவர் முருகன் கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மருதா னபள்ளி பகுதியை சேர்ந்த முத்தப்பா (54) என்பவர் அப்பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் மீன்பிடிக்க சென்றார். எதிர்பாரத விதமாக தவறி விழுந்த அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி அந்தோணி மேரி தந்த புகாரின்பேரில் தேன்கனி கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News