உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து பெண் சாவு

Published On 2023-06-28 14:56 IST   |   Update On 2023-06-28 14:56:00 IST
  • விஷ பாம்பு ஒன்று மீனா வை கடித்துள்ளது.
  • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மீனா உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், போபனபள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவரதுமனைவி மீனா (வயது26).இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அன்று மீனா வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது விஷ பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மீனா உயிரிழந்தார்.

இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News